fbpx

வீட்டில் எறும்பு தொல்லையா?… ஒரே ஒரு கிராம்பை வைத்து மொத்த கூட்டத்தையும் விரட்டிடலாம்!… எப்படி தெரியுமா?

வெயில் காலங்களில் உடல் குளிர்ச்சிக்காக எறும்புகள் கூட வீட்டை ஆக்கிரமித்துக்கொள்ளும். இதனால் பெரும் தொல்லையாக இருக்கும். இதனை கொல்லாமல் விரட்ட எளிய வழியை தெரிந்துகொள்வோம்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, அதில் 4 முதல் 5 தேக்கரண்டி உப்பு போடுங்கள். பின்னர் தண்ணீர் கொதித்ததும், இறக்கி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிவிடுங்கள். இந்த தண்ணீரை எறும்புகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால் அவை அங்கிருந்து விலகும். சுண்ணாம்பு கட்டிகளால் வரையும் கோடுகளை எறும்புகள் கடப்பதில்லை. இப்போது கடைகளில் சுண்ணாம்பு கட்டி வாங்கி பயன்படுத்துங்கள் அல்லது எறும்புகளை விரட்ட பூச்சிகளை விரட்டும் சாக்பீஸ் சந்தைகளில் கிடைக்கும். அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம்.

எறும்புகள் நம்முடைய ஆடை படுக்கை விரிப்பு போன்றவற்றில் நுழைவதால் இரவில் தூக்கம் தொலையும். அளவில் சிறியதாக உள்ள எறும்பை கொல்வதும் கடினம் தான். ஆனால் அவை கடிக்கும் போது சருமம் சிவப்பு நிறமாக மாறும். இதில் இருந்து விடுபட வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் கற்பூரத்தை பயன்படுத்துங்கள்.கற்பூரத்தை பொடி செய்து எறும்புகள் நடமாடும் வழியில் தூவுங்கள். கற்பூரத்தின் வாசனையால், எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. அலமாரிகளிலும் மற்ற இடங்களிலும் கற்பூரத்தை வைத்தால் பூச்சிகளிடம் இருந்து தற்காக்கலாம்.

எறும்புகளை விரட்ட மிளகாயையும் பயன்படுத்தலாம். மிளகாயின் வாசனையால் எறும்புகள் விலகும். மிளகாய் வாசனையை அறியும் போது எறும்புகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். மிளகாயை அரைத்து அந்த நீரை எறும்புகள் அதிகம் உள்ள இடத்தில் தெளிக்கவும். கிராம்பு வைத்தியம் மூலம் எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதையும் தடுக்கலாம். கிராம்பு வாசனை ரொம்ப வலுசாக இருப்பதால் எறும்புகள் அதை விரும்புவதில்லை. உங்களுடைய வீட்டில் எறும்புகளின் தொல்லை அதிகமாக இருந்தால், கிராம்புகளை அவற்றின் அருகே வைக்கவும். சிறிது நேரத்தில் அவை ஓடிவிடும்.

Kokila

Next Post

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்...! உடனே விடைத்தாள்‌ நகல் பதிவிறக்கம் செய்ய வேண்டும்…!

Wed May 31 , 2023
அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின்‌ […]

You May Like