1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் தவறானது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது..
ரயிலில் 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதற்காக டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே விளக்கமளித்துள்ளது.. 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் ரயில்வே விளக்கமளித்துள்ளது..
எனினும் பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது..