சில நாட்களாக ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் தனது தாயுள்ளத்தையும் மன நேயமிக்க செயலையும் செய்து வருகிறதை அறிந்து வருகிறோம். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் திருமலைபுரத்தில் விவசாயி ராமர் என்பவர் ஆடு, மாடு மற்றும் நாய்களை வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் தான் வளர்த்த தாய் ஆடானது 3 குட்டிகள் போட்டு விட்டு உடல் நல குறைவால் இறந்து விட்டது. தாய் ஆட்டினை இழந்த ஆட்டுக் குட்டிகள் பால் இல்லாமல் பசியால் பெரும் துன்பத்தில் இருந்து வந்துள்ளது.
பசியில் பரிதாபமாக சுற்றி திரிந்த அதனுடைய ஆட்டுக் குட்டிகளுக்கு அவர் வளர்த்த நாயானது பால் அளித்து வருகிறது. நாயானது ஆட்டுக் குட்டிகளை அரவணைக்கும் இந்த செயலானது பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.