fbpx

’எதை மறந்தாலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்துறாதீங்க’..!! இதை கூட உங்கள் கண்களுக்கு காட்டிக்கொடுக்கும்..!!

நம்மில் பலருக்கு வாழ்க்கை என்பது ஒரு பெரும் போராட்டமாகவே இருக்கும். எந்த ஜோதிடரிடம் போய் ஜாதகத்தை காட்டினாலும் அவர் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு தான். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் என்ற கருத்தில் இருந்து, குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவது உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.

இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவுக்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை. இப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்.

Read More : பிரபல நடிகருடன் கள்ள உறவு..!! ’கோடான கோடி’ பாடல் நடிகைக்கு ரெட் கார்ட்..!! வசமாக சிக்கியது எப்படி..?

English Summary

This clan deity worship is able to get the benefits of other deity worships as well

Chella

Next Post

சமூக உறுப்பினராக இல்லாவிட்டாலும், பிளாட் ஆக்கிரமிப்பாளர் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்!… சிவில் கோர்ட்!

Sat Jun 8 , 2024
The occupier of the flat, whether a member of the society or not, has to pay maintenance charges

You May Like