கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார்.
பின்னர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியபோது, ’’ மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கண்டிப்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். போல் இருக்காதீர்கள் ’’ என அறிவுரை வழங்கினார். இது தற்போது டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. டுவிட்டர் பயனர்கள் உதயநிதி அவர்கள் கூறுவது சரி ஒரு போதும் மணமக்கள் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். போல இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் உதயநிதி-அன்பில் போல் இருக்க வாய்ப்புள்ளது. என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ‘
இதைத் தொடர்ந்து மற்றொர நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ’’ “தி.மு.க இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார், அண்ணா ஆகியோரை நான் நேரில் பார்த்ததில்லை. முத்தமிழறிஞர் கலைஞரோடு இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது இந்த மூன்று பேரும் இல்லை. அவர்களின் மறு உருவமாகத் தான் நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளைப் பார்க்கிறேன். மூத்த நிர்வாகிகளைக் கவுரவிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. என குறிப்பிட்டார்.