fbpx

’என்னுடைய உத்தரவுக்காக வெயிட் பண்ணாதீங்க’..!! ’இனி நீங்களே முடிவு பண்ணி லீவு விட்ருங்க’..!! அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

வசதி வாய்ப்பு இருப்பதால், எங்களுக்கு உரிமைத்தொகை வேண்டாம் என்று பெண்கள் கூறியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பேரிடர் மேலாண்மை குறித்து கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் எனது அறிவுறுத்தலுக்கு எதிர்பார்க்காமல், விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இடிந்த கட்டடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டடங்கள், மின்சாரம், மூடப்படாமல் உள்ள குழிகள் போன்றவற்றை பாதுகாப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 31,000 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். உணவு இல்லை என்பதால் பள்ளிகளுக்கு செல்லவில்லை என குறைபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்தை பொறுத்தவரை மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 64 லட்சம் பெண்கள், தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதால், எங்களுக்கு உரிமைத்தொகை வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

’மாதவிடாய் சமயத்திலும் விடாமல் உடலுறவு’..!! ’ஒரு நாளைக்கு 40 கஸ்டமர்’..!! பிரபல நடிகை கண்ணீர் மல்க பேட்டி..!!

Tue Oct 17 , 2023
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள், குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் sஎன டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. இதையடுத்து, இந்தியில் 2018இல் வெளியான லவ் சோனியா என்ற […]

You May Like