fbpx

போதையால் விபரீதம்…..! அம்மிக்கல்லை தலையில் போட்டு, மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்…..!

குடிபோதையில், மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி, போட்டு, கொடூரமாக துடிக்க, துடிக்க கொலை செய்த கணவனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்(39). கூலி தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர், ராதா (33). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஆகவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தன்னுடைய குடும்பத்துடன், தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடி போதைக்கு அடிமையான கோவிந்தன், நாள்தோறும், மது குடித்துவிட்டு வந்து, மனைவி ராதாவிடம் சண்டையிடுவது வழக்கம். வழக்கம்போல, நேற்று இரவும், கோவிந்தன் குடிபோதையில் வந்து, தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால், ஆத்திரம் கொண்ட கோவிந்தன், அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராதாவின் தலையில் போட்டிருக்கிறார்.

இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதா, அலறி துடித்த சத்தம் அருகில் இருந்த நபர்களுக்கு கேட்டதால், உடனடியாக அங்கு ஓடி, வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஆகவே அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இது தொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து, கோவிந்தனை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

நடு ரோட்டில் பெண்ணை நிர்வாணப்படுத்திய இளைஞருக்கு அடி, உதை…..! தெலுங்கானாவில் பரபரப்பு….!

Wed Aug 9 , 2023
இரவில் நடு ரோட்டில், ஒரு பெண்ணை நிர்வாண படுத்த முயற்சி செய்த இளைஞரை அந்த இளைஞரின் தாயே தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில், சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது, இரவு 8 மணி அளவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன், அதே பகுதியில் வந்து கொண்டிருந்தார். அவர் துணிக்கடையில் […]

You May Like