மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் அடுத்த வருகின்ற. அதை தொடர்ந்து தற்பொழுது டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்களும் திரையிட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு வெளியே இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 24 மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை போலீசார் கைது செய்தனர். வாடிக்கைக்கு எதிராக பல்வேறு கண்டன குரல்கள் எழுந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.