fbpx

தொடர் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 97.5 அடியைக் கடந்துள்ளது.

கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது | Dinamalar Tamil News

தற்போது அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து அதன் நீர்வரத்தான விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் 4 மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால், பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Breaking : முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்..

Thu Jul 14 , 2022
கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை […]
பிரியா மரணம்..!! சிக்கியது முதல்வர் முக.ஸ்டாலினின் பழைய ட்வீட்..!! விளாசும் பாஜக தலைவர்கள்..!!

You May Like