fbpx

இவர்களுக்கு மட்டுமே மின்சார கட்டணம்‌ உயரும்‌…! எவ்வளவு தெரியுமா…? தமிழக முக்கியமான அறிவிப்பு…!

தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரை மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம்‌ மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌ கட்டணம்‌ உயர்த்தப்பட்ட நிலையில்‌, 2022 ஏப்ரல்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதத்தின்‌ விலைக்‌ குறியீட்டு எண்‌ கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்பட்டது. இதனால்‌ கட்டண உயர்வின்‌ அளவு 4.7 %லிருந்து 2.18 % ஆக குறைக்கப்பட்டது.

இந்த குறைந்த உயர்விலிருந்தும்‌ பொதுமக்களைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும்‌ 2.18% உயர்வையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்று, மின்‌வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர்‌ ஆணையிட்டுள்ளார்‌.

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும்‌ இருக்காது. அதேபோல வேளாண்‌ இணைப்புகள்‌, குடிசை இணைப்புகள்‌, வீடுகளுக்கு 100 யூனிட்‌இலவச மின்சாரம்‌, கைத்தறி, விசைத்தறிகள்‌ போன்றவற்றுக்கு அளிக்கப்படும்‌ இலவச மின்சார சலுகைகள்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. வணிக மற்றும்‌ தொழில்‌ அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்‌ ஒன்றிக்கு 13 பைசா முதல்‌ 21 பைசா வரைமிகக்‌ குறைந்த அளவில்‌ மின்கட்டணம்‌ உயரும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து...! அலரும் பயணிகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Fri Jun 9 , 2023
நாட்டையே உலுக்கிய ஒடிசாவில் நடந்த மூன்று ரயில்கள் விபத்து சம்பவத்தின் போது ரயிலின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில் இருந்து ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட 25 வினாடி வீடியோவில் பயங்கரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. ரயிலின் ஸ்லீப்பர் கோச் ஒன்றில் […]

You May Like