தெலுங்கானாவில் எட்டு வயது சிறுவன் பள்ளியில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கேசவரெட்டி பகுதியைச் சார்ந்த எட்டு வயது மாணவன் கார்த்திக். இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். திடீரென அந்த மாணவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் பள்ளியை கேட்டபோது தங்களின் மகன் மேஜையில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் அந்த மாணவன் வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் தான் மரணம் அடைந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பிற்குமிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி இருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் குறுக்கீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. சில நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடித்து திருத்த உரிமை உண்டு தான் ஆனால் அதற்காக எல்லை கடந்து போவது இது போன்ற ஆபத்தான பின் விளைவுகளில் கொண்டு முடியும் என்பதை மறுக்க முடியாது.