தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்டகாலம் காத்திருக்கும் விவசாயிகள், ‘தட்கல்’ முறையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ‘தட்கல்’ முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளும் தற்போது பதிவு செய்யும் விவசாயிகளும், ‘தட்கல்’ முறையில் எளிதாக இலவச மின் இணைப்பு பெறலாம். 5 HP இணைப்புக்கு, 2 லட்சம் ரூபாய்; 7HP முதல் 10 HP வரையில், 3 லட்சம் ரூபாய், 15 HP வரையில் பெற, 4 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி இணைப்பு பெறலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள் பதிவு செய்யாத விவசாயிகள் ‘தட்கல்’ முறையில் இலவச மின் இணைப்பு பெறலாம். அதற்காக அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.