fbpx

தமிழகத்தில் இந்த பகுதிகளில், இன்றும் மழையை எதிர்பார்க்கலாம்…..! வெதர்மேன் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக, பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில், கனமழை பொழிந்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலை வரையில், பொழிந்து இருக்கிறது. இதுவரையில், பொழிந்த மழை வரலாறுகளில் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இது இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இன்று காலை மழை மேகங்கள் எல்லாம், கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். அதன் காரணமாக, பகல் நேரத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், நேற்று இப்படி ஒரு மழை பொழியும் என்று, யாருமே கணித்திருக்க வாய்ப்பில்லை. இது சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை பொழிந்த 200 மில்லி மீட்டர் மழை போன்ற ஒரு அதிசய நிகழ்வாக தான் இருக்கிறது. அதாவது, 1.5 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. என்று தான் நம்மால் கணித்திருக்க முடியும். ஆனால், நேற்று 100 மில்லி மீட்டருக்கு மேல், மழை பொழிந்திருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், இன்று மாலை அல்லது இரவில் நேற்றைப் போலவே, பரவலாக மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Next Post

’ஜெயிலர்’ படம் வெற்றி பெற காரணமாக இருந்ததே விஜய் ரசிகர்கள் தான்..!! எப்படி தெரியுமா..? பயில்வான் சொன்ன சீக்ரெட்..!!

Mon Aug 14 , 2023
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது ஜெயிலர். இப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகரும் […]

You May Like