fbpx

பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல்…! 5 கிலோ ஒரு சிலிண்டர் ரூ.1,300 ஆகும்…!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் படி, 4.2 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 ஆகும். 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200 ஆகும்

5 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.1,300 ஆகும். உஜ்வாலா 2.0-ன் தற்போதைய முறைகளின்படி, இலவச எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு முதலாவது சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும். 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 மறு நிரப்புதல்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் இலவச எரிவாயு திட்டத்தில் தொடராமல் போனால், தகுதியான ஏழைக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் உரிய பயன்களைப் பெற முடியாமல் போகலாம்.

Vignesh

Next Post

#சற்று முன்; ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை ரூ.100 உயர்வு...! இன்று முதல் அமல்...

Thu Sep 14 , 2023
ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2 ஆண்டில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஒரேயடியாக உயர்த்தி உள்ளது ஆவின் நிர்வாகம். 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.700 ஆகவும், […]

You May Like