இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
2021 ஐடி விதிகளின் கீழ் ஏழு இந்திய மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் 85,73,000 சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஐடி விதிகள், 2021 இன் கீழ் உள்ள அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, 8 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்களை முடக்குவதற்கான உத்தரவுகளை 16.08.2022 அன்று பிறப்பித்துள்ளது.
முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன, 85 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் சந்தா பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே வெறுப்பை பரப்பும் நோக்கில் இந்த யூடியூப் சேனல்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத கட்டடங்களை இடித்துத் தள்ளுவதற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது, மதப் போரைப் பிரகடனப்படுத்துவது போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.. இதுபோன்ற உள்ளடக்கம் நாட்டில் மத நல்லிணக்கத்தை உருவாக்கி, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
யூடியூப் சேனல்கள் வெளியிட்ட செய்திகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்பு உறவுகள் மற்றும் நாட்டில் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டது. அதன்படி இந்த சேனல்கள் முடக்கப்பட்டது..
தவறான தகவல்களைப் பரப்பியதற்காக யூடியூப் சேனல்களை மத்திய அரசு அமைச்சகம் முடக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் சேனல்களை அரசாங்கம் முடக்கியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 செய்தி சேனல்களும், 10 இந்திய செய்தி சேனல்களும் அடங்கும்..