Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன.
முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஆண்டு பணியமர்த்தல் 30% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும். மார்ச் 2023-க்குள், HCL நிறுவனம் 30,000-க்கும் மேற்பட்ட புதியவர்களை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்நிறுவனம் 16,000 பேரை பணியில் சேர்த்துள்ளது.
![இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/IT-Staff.jpg)
இதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனம் 40,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளது. இந்த ஆண்டிற்குள் 50 ஆயிரம் பேரை பணியமர்த்த இலக்கி நிர்ணயித்துள்ளது. மறுபுறம், விப்ரோ நிறுவனம் இந்த நிதியாண்டில் 14,000 பேரை வெற்றிகரமாக பணியில் அமர்த்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் இலக்கு 30,000 பேர். இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 35,000 புதியவர்களை பணியமர்த்தியது. இந்தாண்டில் 47,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
![இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Infosys-1024x618.jpg)
ஆனால், சில நாட்களுக்கு முன்பு, விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற மற்ற நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தள்ளிவைத்துள்ளன. மேலும், நிறுவனங்கள் அறிவிக்கும்வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.