இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த அனுபவம் மிக்க பவுளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார். மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா என எதிர்பார்த்த நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 தொடர் உலக கோப்பையில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஜாஸ்பிரித் பும்ரா முதுகு தண்டுவடத்தில் பிரச்சனையால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருந்ததும், தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதாக கூறப்பட்ட வரும் செய்தி ரசிகர்களை மட்டுமல்லாது. இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை கேள்விக் குறியாக்கி உள்ளது.
இதனிடையே ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து ஜாஸ்பிரித் பும்ரா வெளியேறியதால் அவருக்கு மாற்றாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ஜாஸ்பிரித் பும்ரா விலகினால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.