சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். அவருடைய மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மனைவி இல்லாத நேரத்தில் தனது சொந்த மகளுக்கு அந்த தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தனது மகனை கடைக்கு அனுப்பி விட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டது. அடுத்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் பெற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.