fbpx

தமிழகத்தில் மட்டும் 755 தன்னார்வ தொண்டு பதிவு ரத்து…! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.‌‌…!

தமிழகத்தில் 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 6,677 NGO-களின் FCRA பதிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்து பூரவமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், என்ஜிஓக்களின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் கீழ், விதிகளை மீறியதற்காக பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதிவு செய்யவோ அல்லது முன் அனுமதி வழங்கவோ தகுதி இல்லை என்றார்.தமிழகத்தில் மட்டும் அதிகப்படியாக 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 734 NGO-களும், உத்தரபிரதேசத்தில் 635, ஆந்திராவில் 622 மற்றும் மேற்கு வங்கத்தில் 611 பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

#Jobs: ஓராண்டிற்கு 70,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்...! அரசுக்கு அடுக்காக கேள்வி...?

Sun Dec 18 , 2022
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்’, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், இரண்டு வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் என் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் கணக்குப்படி பார்த்தால், 2021-ம் ஆண்டே அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் […]

You May Like