கோவையில் தனியார் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி. ஏற்கனவே மூர்த்தி இயந்துவிட்டார். தேவி மற்றும் சகோதரி சத்யா ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனியார் குடியிருப்பு தொட்டிகளை தூய்மை செய்யும் பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது நேற்று மாலையில் இருந்து தேவி காணவில்லை.
தேவியின் சகோதரி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்துள்ாளர். அப்பகுதியில் தியமைணப்புத்துறை காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தேவியின் உடல் மீட்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் தடையங்களை சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரதே பரிசோதனைக்காக தேவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை அல்லது தவறி விழுந்து தேவி இறந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.