fbpx

#திருச்சி :பிறந்த சிலமணி நேரத்தில் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கொடூரம்..!

திருச்சி மாவட்ட பகுதியில் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்திற்கு அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிறிது மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது. 

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவிய நிலையில், இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். 

இதனையடுத்து விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குழந்தையை வீசி சென்றது யார் என்று, குழந்தையை யாராவது கடத்தி சென்ற நிலையில் வீசி உள்ளரா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Baskar

Next Post

#சேலம் :கணவனுடன் நிகழ்ந்த சண்டையில் மனைவி தூக்கிலிட்ட நிலையில் மர்ம மரணம்..!

Wed Dec 7 , 2022
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திண்டமங்கலத்தில் சின்னப்பன் தனது மகள் கோமதியுடன் வசித்து வருகிறார். மகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார் . இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.  இதன் காரணமாகவை தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையில் சுரேஷ் மனைவியிடம் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோமதி […]

You May Like