fbpx

தமிழக அரசு சார்பில் படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400-ம்‌, பட்டதாரிகளுக்கு, ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ 31.03.2022 உடன்‌ முடிவடையும்‌ காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு. அலுவலகத்தில்‌ இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட கல்வித் தகுதியியை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல்‌ செய்திருத்தல்‌ வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌. SC,ST பிரிவினருக்கு 31.03.2022 அன்று 45 வயதும்‌, மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகையாமல்‌ இருக்கவேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமாக உச்சசரம்பு இல்லை. விண்ணப்பதாரர்‌ பள்ளி அல்லது கல்லூரியில்‌ நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல்‌ வழியில்‌ படிக்கலாம்‌) பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌ கால்நடை அறிவியல்‌ மற்றும்‌ இது போன்ற தொழில்நுட்பப்பட்டம்‌ பெற்றவர்கள்‌ இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்‌.

இவ்வுதவித்தொகை பெற முதல்‌ முறையாக விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுடையவர்கள்‌ விண்ணப்ப படிவங்களை தருமபுரி மாகட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூரித்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ 31.08.2022 வரை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ நேரில்‌ அளித்திடுமாறும்,‌ மேலும்‌, ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம்‌ நிறைவுபெறாமல்‌ 2021 2022-ம்‌ நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம்‌ அளிக்காதவர்கள்‌, 28.02.2022-க்குள்‌ சுய உறுதிமொழி ஆவணம்‌ அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

Also Read: ரேஷன் அட்டையில் திருத்தம்…! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

Flash; சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடவடிக்கை...! மத்திய அரசு உத்தரவு

Sat Jul 9 , 2022
உணவு மற்றும் பொது விநியோகத் துறை,  கடந்த 6-ந்தேதி நடைபெற்ற  கூட்டத்தில், சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15-ஐ   உடனடியாக அமலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. விலைகுறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க,  உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள்/சுத்திகரிப்பு செய்பவர்களால் விநியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு ஏற்படும்போதெல்லாம், […]

You May Like