fbpx

குடித்துவிட்டு தினமும் சண்டை..!! அதிகாலையில் அலறிய குரல்கள்..!! கடலூரில் பரபரப்பு சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் தோப்புக்கொல்லை தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஹரிணி (8), ஹேமலதா (6) என்ற இரண்டு மகள்களும், குமுதன்(5) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், அருள் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது அருளின் தாய் தமிழேந்தி இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் நேற்று காலை 5 மணிக்கு கண்விழித்த அருள் மீண்டும் தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.

இதனால் தமிழேந்தி தனது பேர குழந்தைகளை அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே முத்துலட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தன் மீதும் ஊற்றி கொண்டதால் இருவர் மீதும் தீ பற்றி எரிந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

எதேய் மன்னிப்பா ம்ம்ஹும் செல்லாது செல்லாது….! உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை….!

Sun Apr 23 , 2023
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை சகாக்கள் மற்றும் முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் பலரின் சொத்து பட்டியல் குறித்த ஆவணங்களை வெளியிட்டார். அவருடைய இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like