fbpx

“எனக்கு குழந்தைகள் முக்கியம் இல்லை, கள்ளக்காதலன் தான் முக்கியம்” வீட்டை விட்டு ஓடிய மனைவி; ஆத்திரத்தில் முதல் கணவன் செய்த காரியம்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஓடைப்பட்டி தெருவில் 33 வயதான ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 28 வயதான சந்தனமாரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். மாடுகள் வளர்த்து, பால் வியாபாரம் செய்து வரும் இவர், தனது பால் பண்ணையில் வேலை செய்வதற்காக, சகோதரர் முறை கொண்ட காளிராஜ் என்பவரை வேலைக்கு வைத்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்க்கும், ராம்குமாரின் மனைவி சந்தனமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், சந்தனமாரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு ராம்குமாருடன் சென்றுள்ளார். வெளியூருக்கு சென்ற இருவரும், கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஒரு கட்டத்தில், காளிராஜ் மற்றும் சந்தனமாரி, தங்களின் குழந்தையுடன் ராஜபாளையத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

இதனை அறிந்த ராம்குமார், காளிராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த காளிராஜ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, ராம்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், காளிராஜ் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராம்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த காளிராஜை கைது செய்துள்ளனர்.

Read more: பள்ளி சிறுவன் மீது ஏற்பட்ட ஆசை; வேறு ஊருக்கு அழைத்துச் சென்று இளம்பெண் செய்த காரியம்.

English Summary

first husband killed her wife’s lover

Next Post

தினமும் இரவில் வீட்டில் கற்பூரம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா..?

Tue Jan 28 , 2025
What happens if you light camphor at home every night?

You May Like