fbpx

CUET தேர்வுக்கு புதிய தேர்வு மையமாக திருவாரூர் செய்யப்பட்டுள்ளது…! மத்திய அரசு அறிவிப்பு…!

2024 சியுஇடி, பிஜி தேர்வுகளுக்கு, திருவாரூர் புதிய தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; 2024 சியுஇடி பிஜி தேர்வுகளுக்கு, திருவாரூர் புதிய தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவித்துள்ளது. சியுஇடி பிஜி 2024 தேர்வுகளுக்கான தேர்வு மையமாக திருவாரூரை என்.டி.ஏ சேர்த்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே வேறு மையங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்த மாணவர்கள், 09.02.2024 முதல் 11.02.2024 வரை திருத்துவதற்கான இணையதள பக்கத்தில், தங்கள் மையத்தை “திருவாரூர் (TN16)” என்று மாற்றிக்கொள்ளலாம்.

தேர்வு தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் என்.டி.ஏவின் இணையதளங்களான www.nta.ac.in மற்றும் https://pgcuet.samarth.ac.in ஆகியவற்றை தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முட்டையை பச்சையாக குடித்தால் நோய் பாதிப்பு ஏற்படும்..! வேறு என்னென்ன உணவுகள்..!

Sat Feb 10 , 2024
பொதுவாக காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக பச்சையாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால் உடலில் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் என்று கூறி வருகின்றனர். ஒரு சில காய்கறிகளை பச்சையாக உண்பதின் மூலமே நமக்கு ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆனால் ஒரு சில உணவுகளை வேக வைத்து உண்பதால் தான் […]

You May Like