fbpx

“செம வாய்ப்பு” SSC இளநிலை மொழிபெயர்ப்பு பணிக்கு வரும் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளுக்கு   இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வை நடத்தவிருக்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் தகுதிபடைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 11.00 மணிகுள் சமர்ப்பிக்க வேண்டும். இணையம் வழியாக கட்டணம் செலுத்த 05.08.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும். கணினி அடிப்படையிலான தேர்வு 2022 அக்டோபரில் நடைபெறும். தென்மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் 3, தமிழ்நாட்டில் 3, தெலங்கானாவில் 1 என மொத்தம் 7 மையங்கள் அல்லது நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் நாகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Also Read: மிக கவனம்… Tnpsc Group Exam எழுத்தும் தேர்வர்களுக்கு இது அனைத்தும் கட்டாயம்… இல்லை என்றால் நீங்க தேர்வு எழுத முடியாது…!

Vignesh

Next Post

’இந்தியாவைப் போல் உலகில் எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை’..! - மத்திய அமைச்சர்

Sun Jul 24 , 2022
உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ”ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்பாட்டினால் நீதி வழங்குவது பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

You May Like