பீகார் முன்னாள் அமைச்சர் சுபாஷ் சிங் இன்று காலை காலமானார்.
பாஜக எம்.எல்.ஏ.வும். முன்னாள் அமைச்சருமான சுபாஷ் சிங் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியின் எய்ம்ஸ் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.. அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.. சுபாஷ் சிங்கின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காக ஒரே எம்.எல்.ஏ சுபாஷ் சிங் தான்..
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பிரபலமான பாஜக தலைவராக இருந்தவர் சுபாஷ் சிங்.. கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை அவர் சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. 2005,2010,2015,2020 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், 2020-ல் அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..