தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள புகார் தற்போது காவல் துறை விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.4.5 கோடி பணம் வழங்கியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனவிமல் அளித்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட […]

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு […]