fbpx

சூப்பர் வாய்ப்பு…! அரசு சார்பில் வரும் 16-ம் முதல் இலவச பயிற்சி வகுப்பு…! உடனே அப்ளை பண்ணுங்க…!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ 16-ம் தேதி முதல்‌ நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ மத்திய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ மேல்நிலை படிப்பு அளவிலான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ தகுந்த பயிற்றுநர்களைக்‌ கொண்டு 16.12.2022 வெள்ளிக்கிழமை முதல்‌ வகுப்புகள்‌ நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில்‌ இலவசமாக பாடக்‌ குறிப்புகள்‌ வழங்கப்படும்‌ மற்றும்‌ மாதிரித்தேர்வுகள்‌ நடத்தப்படும்‌.

இப்பயிற்சியில்‌ சேரவிருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://cutt.ly/3181Cpw என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு 04342-296188தொலைபேசி எண்‌ வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள ,தகுதி வாய்ந்தவர்கள்‌ இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

#Cyclone : வங்கக்கடலில் 16-ஆம் தேதி புதிய புயல்? மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

Mon Dec 12 , 2022
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]

You May Like