ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், பேசிய அவர், வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை இந்த காணொலி விளக்குகிறது என்றார்.
மேலும், 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார். பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 -ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும், இது ஆங்கிலேயர்களின் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.