fbpx

மாணவர்களே கவனம்… வரும் 13 முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும்…! மத்திய அமைச்சர் வலியுறுத்தல்…!

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், பேசிய அவர், வளமான பாரதத்தை சூழ்ச்சியின் காரணமாக வீழ்த்தி மீண்டும் எழுச்சி கண்ட கதையை இந்த காணொலி விளக்குகிறது என்றார்.

மேலும், 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ உ சி யின் 150 ஆவது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது என தெரிவித்தார். பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 -ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எனவும், இது ஆங்கிலேயர்களின் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Vignesh

Next Post

#Pension: இனி இவர்களுக்கு எல்லாம் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெற முடியாது...! அதிரடி உத்தரவு போட்ட‌ நீதிமன்றம்...!

Mon Aug 8 , 2022
கனரா வங்கியில் இருந்து ராஜினாமா செய்த ஊழியர், வருங்கால வைப்பு நிதி திட்டத்தை ஏற்கனவே தேர்வு செய்திருந்தால், ஓய்வூதிய திட்டத்திற்கான உரிமையை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை 31, 2008 அன்று வங்கிப் பணியை ராஜினாமா செய்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட எஸ்.குணசேகரன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். 2010 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, பணியில் […]
9.95% வட்டி கிடைக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம்..! இந்த திட்டத்தில் இவ்வளவு பலன்களா?

You May Like