கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த திருமணமான 35 வயது பெண் ஒருவர், இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த இளைஞர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ”எனக்கு 6 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எனது படுக்கை அறை காட்சி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. எப்படி இந்த காட்சிகள் வெளியே வந்தது என்று வீடு முழுவதும் சோதனை செய்தேன். அப்போது, படுக்கை அறையின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த இடைவெளியில் ஒரு சிறிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தேன். அந்த கேமராவை வைத்துதான் படம் பிடித்துள்ளார்கள்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோக்கள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்த போது யார் யார் என்பது அம்பலம் ஆனது. அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 37), சுமேஷ் (20), நிகேஷ் (20) மற்றும் பிபின் (20) ஆகியோர்தான் அந்த பெண்ணின் படுக்கையறை காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளம்பெண்ணையும், இளைஞரையும் சிக்க வைக்க திட்டமிட்டே இந்த கும்பல், வீடியோ பதிவு செய்துள்ளனர். முன்னதாக கள்ளத்தொடர்பை கைவிடும்படி அந்த கும்பல் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், கல்லூரி மாணவர்களின் எச்சரிக்கையை அவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் படுக்கை அறையில் ரகசியமாக செல்போன் கேமராவை வைத்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த காட்சியை தங்களுடைய வாட்ஸ்-அப் மூலம் பரப்பி உள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.