மகாராஷ்டிராவில் இரண்டு பேருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 207 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 20 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர் என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 53 வயது நபர் ஒருவர் குய்லின்-பாரே நோய்க்குறியால் இறந்துள்ளார், இது நரம்பு கோளாறு காரணமாக நகரத்தில் ஏற்பட்ட முதல் மரணம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
குய்லின்-பார் நோய்க்குறி என்றால் என்ன? Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் பெரும்பாலான பகுதிகளை பாதிக்கக்கூடிய திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு அரிய நரம்பியல் நிலை நோயாகும் . குய்லின் பாரே நோய்க்குறி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த நோய் திடீரென உருவாகும். பக்கவாதம் போல் உடலின் இருபக்கங்களையும் முடக்கி, புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதன் அறிகுறிகள் பின்வருமாறு..
தசைகள் பலவீனமடைவது,
உடலெங்கும் வலி,
முதுகில் அடிக்கடி வலி உணர்வு,
மூட்டுப் பகுதிகளில் கூச்சத்துடன் கூடிய வலி,
கைகள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு,
சுவாசப் பிரச்சனைகள்,
மூச்சுத் திணறல்,