fbpx

உடலுறவுக்கு மறுத்த காதலியை 15 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை..!! கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய காதலன்..!!

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியைச் சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஓராண்டாக காதலில் இருந்து வந்த நிலையில், பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து உடலுறவு கொள்ள வற்புறுத்தி உள்ளார். போதைக்கு அடிமையான அனுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

அன்று காலையிலும் போதையில் இருந்த அனுதீப் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளார். அவர் சம்மதிக்கவில்லை. எனவே கோபமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்துள்ளார். ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்த மாணவி மதியம் பலத்த காயத்துடன் வீட்டுக்கு வந்து நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதற்கான காரணம் பற்றி பெற்றோர் விசாரித்த போது அனுதீப் தன்னை காதலித்ததாகவும், கல்லூரியில் இருந்து அழைத்து வந்து 15 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, படுகாயம் அடைந்த மாணவியை தற்போது ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chella

Next Post

இந்த 4️ மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க உள்ள மழை…..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

Mon Apr 24 , 2023
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில், இந்த வெயிலுக்கு இதமாக நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like