ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள ஆர்எஸ் மங்கலத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் என்ற கம்பெனி இயங்கி வந்துள்ளது. இதில் திருச்சி மாவட்ட பகுதிக்கு உட்பட்ட மணப்பாறையை சேர்ந்த நல்லசாமி என்ற ஊழியர் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் காதலை விட்டு விட வேண்டும் என்று அவரது காதலி அவரிடம் சொல்லியுள்ளார். இதனை தொடர்ந்து காதலை கைவிட வேண்டாம் என்று பலமுறை தன் காதலியிடம் கெஞ்சியுள்ளார் நல்லதம்பி.
இருப்பினும், அந்த பெண் அவர் கூறியதை ஏற்காமல் இருந்துள்ளார். இந்த காதல் பிரிவால் மன உளைச்சலில் இருந்த நல்லசாமி தன் காதல் தோல்வியை தாங்க முடியாமல் அவர் தங்கியிருந்த அறையிலேயே பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.