fbpx

வெள்ளி, தங்கம் போன்ற உலோக முலாம் பூசப்பட்ட உணவை சாப்பிடலாமா? மருத்துவரின் பதில் இதோ.!

மனித உடல் எடையில் சுமார் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. இந்நிலையில், அதை நாம் இன்னும் சாப்பிட வேண்டுமா? அதற்கு தேவை இருக்கிறதா..? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பளபளப்பான, இணக்கமான உலோகங்களை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதன் மீது நமக்கு பசி இருக்கிறதா? மெலிதாக போடப்பட்ட தங்கத் தாள் மற்றும் வெள்ளியைக் கொண்ட இனிப்புகளை நாம் சாப்பிட ஆசைப்படுகிறோம். ஆனால், ருசியற்ற அந்த உலோகத்தை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்று யோசித்தது உண்டா?

மனிதனின் 70 கிலோ எடையுள்ள உடலில் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகியன நமது உடலின் சில செயல்பாட்டிற்கு முக்கியமானது அல்ல, ஆனாலும் அவை அவசியமானவை என செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) உயிர்வேதியியலின் ஆராய்ச்சியாளரான டாக்டர் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

உடல் முழுவதும் மின் சமிக்ஞைகளை எளிதாக கடத்துவதற்கு, எலும்பு மூட்டுகளை பராமரிக்க, இந்த வகை உலோகங்கள் ஒரு முக்கிய செயல்பாட்டை செய்கின்ற என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, “எலும்பு தொடர்பான சில நோய்களுக்கு சிகிச்சையளிக்க மிகக் குறைந்த அளவிலான தங்கத்துடன் சில உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனை தொடர்ந்து இனிப்புகளில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளித் தாள்களை நாம் குறிப்பிட்ட அளவோடு எடுத்துகொள்ளும் வரை, எவ்வித தீங்கு விளைவிக்காது என்று அவர் கூறுகிறார். தாமிரம் மற்றும் இரும்பு ஆகிய இரண்டு உலோகங்களும் சுவையற்றவையாக இருந்தாலும் இவை இரண்டும் உணவை அலங்கரிக்க சேர்க்கப்படுகின்றன.

மக்கள் வெள்ளியை சுவைக்க முடியும் என்று கூறலாம், ஏனெனில் அதில் காஜு கட்லியுடன் வெள்ளியின் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். அதுஉண்மையான சுவை இல்லை, உலோக மேற்பரப்பு பகுதியில் உள்ள குளிர்ச்சியை நமக்குப் பிடிக்கிறது. எனவே நம் நாக்கு அதை உணர்கிறதே தவற, இது சுவை அல்ல.

இரும்பானது சிறிது புளிப்பு சுவையை உண்டாக்குகிறது. தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவை சுவையற்றவைகள். மக்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இன்று பல இனிப்புக் கடைகளில் அலுமினியத் தகடுகளைப் பயன்படுத்துவதாக பலரால் கூறப்படுகிறது. இதனால் சிலரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Baskar

Next Post

அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கிய தொங்கு பாலம்..? பதைபதைக்கும் வீடியோ

Mon Oct 31 , 2022
குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது. இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் அக்டோபர் […]
அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கிய தொங்கு பாலம்..? பதைபதைக்கும் வீடியோ

You May Like