இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சென்னையில் மார்ச் 17ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.65,680க்கும், ஒரு கிராம் ரூ.8,210க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 111.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: குரூப் 1, குரூப் 4 தேர்வு எப்போது..? TNPSC தலைவர் எஸ்.கே.பிரபாகர் முக்கிய தகவல்..!