fbpx

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை..!! முதலமைச்சர் அறிவிப்பு..!!

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்க அரசு வெயிலின் காரணமாக மலைப்பகுதிகள் தவிர, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கோடை விடுமுறையை மே 2ஆம் தேதி வரை 3 வாரங்களுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும், வெப்ப அலை நிலை ஏப்ரல் 19ஆம் தேதி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Chella

Next Post

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்..!! நிறைவேற்றப்பட்ட 15 முக்கிய தீர்மானங்கள்..!! என்னென்ன தெரியுமா..?

Sun Apr 16 , 2023
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. […]

You May Like