fbpx

’ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்’..! ’இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’

‘ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்களின் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கவும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்படும் தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என்று மானிய கோரிக்கையின்போது தெரிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது.

’ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்’..! ’இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’

அதன்படி தேவையற்ற 11 பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த வகையில் கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 முதல் 12ஆம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம், பணிப்பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

Wed Aug 24 , 2022
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like