ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், நிஷல்கல் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பல நடிகர்கள் உள்ளனர்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2020/08/ponniyin-selvan-update-800x445-1.jpg)
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில் பொன்னியின் டீசர், பொன்னி நதி பாடல் ஆகியவற்றுக்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது..
இந்நிலையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளிக்கலாம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. அதன்படி ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு செப்டம்பர் 30 அன்று படத்தை விநியோகிக்க முடிவு செய்துள்ளது..
லைகா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில் “பிரமாண்டமானது பிரமாண்டமாகிறது! ஐமேக்ஸில் பொன்னியின் செல்வன் முதல் பாகம்.. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் முதல் தமிழ் படம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே பொன்னியின் செல்வன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது..