fbpx

அவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்….! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

சென்ற சில தினங்களுக்கு முன்னர், நாங்குநேரி பகுதியில், ஒரு மாணவர் சாதி ரீதியாக ஏற்பட்ட வன்மத்தால், கொடூரமாக தாக்கப்பட்டார் என்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

நெல்லை மாவட்டம் பகுதியில், இருக்கின்ற நாங்குநேரி கிராமத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஜாதி வெறியின் காரணமாக, சக மாணவர்களே அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. தற்சமயம் அந்த மாணவர் நெல்லையில் இருக்கின்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில், அந்த மாணவரின் கையை ஒட்ட வைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, அந்த மாணவனை நேரில் சென்று பார்த்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் இந்நிலையில், தான், மாணவனுக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சை முறைகளையும் அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ஜாதி வெறியின் காரணமாக, தாக்கப்பட்டு, மருத்துவமனையில் துடிதுடித்து கொண்டிருக்கும் நாங்குநேரி மாணவனுக்கு, அரசு வேலை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி வழங்கி இருக்கிறார்.

Next Post

இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா….! தமிழ்நாடு முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு…..!

Mon Aug 14 , 2023
இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஆகவே பொது இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில், […]

You May Like