டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் 2022க்கான வாக்குப்பதிவு காரணமாக, கல்வி இயக்குனரகம் இன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
டெல்லி MCD தேர்தல் 2022 க்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு தகவலை தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில்; “டெல்லி எம்சிடி தேர்தல் 2022 இன் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று கல்வி இயக்குநரகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைவர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.