fbpx

மக்களே…! ரேஷன் கடைகளில் சிறுதானியம் விநியோகம் அதிகரிப்பு…! மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் சிறுதானியங்களின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கம்பு மற்றும் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் அதிக கொள்முதல் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படுதல். பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசியுடன் சிறுதானியங்களை விநியோகித்தல். சிறுதானியங்களை கொள்முதல் செய்யும் மாநிலங்கள் கூடுதல் இருப்பு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்களும் முன்கூட்டியே தகவல் தெரிரவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பயிர்களின் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, அனைத்து மாநிலங்களும், சிறுதானியங்களை கொள்முதல் செய்து, உள்ளூர் நுகர்வு விருப்பத்தின்படி விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு சிறுதானியங்களை ஊக்குவிக்க சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை ஜி 20 நிகழ்ச்சிகளில் சிறுதானியங்களை ஊக்குவித்து வருகிறது.

Vignesh

Next Post

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

Fri Aug 4 , 2023
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு, இதய சிகிச்சை தொடர்பாக அப்போல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 23ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல் […]

You May Like