fbpx

பரபரப்பு…! ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…? இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர் நீதிமன்றம்…!

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம்.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு ஏப்ரல் மாத இறுதியில் தாக்கல் செய்தார். சிறை தண்டனையை எதிர்த்து மே 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

வெற்றி நாயகன், கேப்டன் கூல் பிறந்தநாள் இன்று!... வாழ்த்து மழையில் நம்ம தல எம்.எஸ்.தோனி!

Fri Jul 7 , 2023
கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ! ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உணவுப்பழக்கங்களிலும் அவர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இதுதான் […]

You May Like