குவைத் நாட்டில் ஒரே நாளில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.
ஒரே நாளில் குவைத் நாட்டில் 7 நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனையானது அளிக்கப்பட்டது என்றும், தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட ஏழு நபர்களில் இரு பெண்களும் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 7 பேர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும், குவைத் பெண் ஒருவரும், சிரியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவரும் இரண்டு நபர்களும் மற்றும் ஒரு எத்தியோப்பிய பெண் ஆகியோரும் இருந்தனர்.
உயிர் வாழும் உரிமையை மற்றவர்களிடமிருந்து இந்த ஏழு நபர்களும் பறித்ததாகவும், இதனால் அவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் குவைத் நீதித்துறை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, ஐரோப்பிய யூனியன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.