fbpx

’எல்லாத்துக்கும் காரணம் அவரு தான்’..!! மது குடித்த மாமனை மர்டர் செய்த மருமகன்..!! திடுக்கிடும் வாக்குமூலம்

கழிப்பறை தகராறில் மாமனை கொடூரமாக கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45). இவருடைய சகோதரி மகன் ஐயப்பன் (29). இவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பது வழக்கம். இந்நிலையில், அவர்கள் இருவரும் சனிக்கிழமை (டிச. 17) இரவு, வீடு அருகே மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஐயப்பன், கீழே கிடந்த கல்லை எடுத்து மாமா அசோக்குமாரை தாக்கியுள்ளார். மேலும், அவருடைய தலையை அருகில் இருந்த சுவரிலும் மோதியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

’எல்லாத்துக்கும் காரணம் அவரு தான்’..!! மது குடித்த மாமனை மர்டர் செய்த மருமகன்..!! திடுக்கிடும் வாக்குமூலம்

இதையடுத்து ஐயப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அசோக்குமார் அவருடைய வீட்டு முன்பு பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அசோக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஐயப்பனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அதே ஊரில் ஒருவரின் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் நள்ளிரவில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஐயப்பனிடம் விசாரித்தபோது, ‘என் வீடும், தாய் மாமன் அசோக்குமார் வீடும் அருகருகே உள்ளது. இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவாக கழிப்பறையுடன் இணைந்த ஒரே ஒரு குளியலறை மட்டுமே உள்ளது. நான் அந்த கழிப்பறைக்குள் இருந்தபோது அசோக்குமார், அந்த கழிப்பறை எங்களுக்குதான் சொந்தம். உன்னால் என் மனைவியும் குழந்தைகளும் குளிக்க முடியவில்லை. நீ வேறு ஒரு கழிப்பறை கட்டிக்கொள் என்றார்.

’எல்லாத்துக்கும் காரணம் அவரு தான்’..!! மது குடித்த மாமனை மர்டர் செய்த மருமகன்..!! திடுக்கிடும் வாக்குமூலம்

இது தொடர்பாக அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நானும் அவரும் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது மீண்டும் கழிப்பறை தொடர்பாக பேச்சு வந்தது. ஒருகட்டத்தில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டேன். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழகத்தை சுற்றி சுற்றி அடிக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கொடுத்த புது அலார்ட்!

Mon Dec 19 , 2022
பருவ மழை காலம் ஓய்ந்தாலும் இந்த மழை ஓய்ந்தபாடில்லை, சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் கரையை கடந்திருந்தாலும் இந்த மழைக்கு மட்டும் தமிழகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதற்கு இன்னமும் மனம் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.வங்கக்கடல், அரபிக்கடல் என்று மாறி, மாறி காற்றழுத்த தாழ்வு பகுதிகள் ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் இன்னமும் பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் இன்றும், நாளையும், […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like