fbpx

‘என் உடலை கொஞ்சம் கொஞ்சமாக தடவினார்’..!! ’2 கால்களையும் பிடித்து’..!! பேராசிரியர் அறையில் கதறிய மாணவி..!! தோழியால் தப்பித்தது எப்படி..?

அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) உதவிப் பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் டாக்டர் கோட்டேஸ்வர ராஜு தேனுகொண்டா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர் அவரது அறையின் கதவை வெளியில் இருந்து பூட்டிய நிலையில், நாங்கள் அவரது மொபைல் போன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து மாலை 5.30 மணியளவில் அவரைக் கைது செய்தோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இளங்கலை தொழில்நுட்ப மாணவியின் புகாரைத் தொடர்ந்து, மின் பொறியியல் துறை பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, பேராசிரியர் தன்னை தனது அறைக்கு அழைத்தபோது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதாவது, மதிப்பெண் குறித்து விவாதிப்பதற்காக அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துள்ளார் பேராசிரியர். அப்போது, அவர் அருகில் மாணவியை உட்காரச் சொல்லி, கைகளை பிடித்துள்ளார். பின்னர், படிப்படியாக தொடையை பிடித்துள்ளார்.

மேலும், அங்கிருந்த கணினியில் ஆபாச பாடல்களை போட்டார். என் வயிற்றைத் தொட்டு தடவினார். நான் அழ ஆரம்பித்தேன். ஆனால், அவர் நிறுத்தவில்லை. அவர் என்னை வசதியாக உணரவும், என் கால்களை சரியாக விரிக்க சொன்னார். பின்னர் அவர் என் கழுத்தை பின்னால் இருந்து பிடித்துக் கொண்டே இருந்தார். பின்னர், அறைக்கு வெளியே காத்திருந்த தனது தோழி, போன் செய்ததை அடுத்து தான் தப்பிச் சென்றதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அறை “சீல்” வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் ஆஷிம் ராய் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படுகிறது. இதனால் அவர் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர முடியும் என்று அவர் கூறினார். இந்த விவகாரம் விசாரணைக்காக நிறுவனத்தின் உள் புகார் குழுவிற்கு (ICC) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் திரு. ரோயா கூறினார். இந்த விவகாரத்தில் பேராசிரியர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’பயனர்களுக்கே தெரியாமல் திருட்டு வேலை’..!! கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 331 செயலிகள் அதிரடி நீக்கம்..!!

English Summary

An assistant professor at the National Institute of Technology (NIT) in Silchar, Assam, has been arrested for allegedly sexually harassing a female student.

Chella

Next Post

புரதம் உட்கொள்வதை முற்றிலும் நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா..? இந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும்..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Sat Mar 22 , 2025
Here’s what will happen to the body if you completely stop having protein

You May Like