fbpx

அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அலர்ட்..!! இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது..!!

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கரூர், திருச்சி, சேலம் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளைய தினம் (ஆக.15) நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூரில் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : உடலுறவின்போது உங்கள் துணை இதை செய்றாங்களா..? இதுதான் காரணம்..!! ஆண்களே தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Heavy rain is likely to occur in Tamil Nadu for the next 4 days, according to the Meteorological Department.

Chella

Next Post

எலோன் மஸ்க்கின் 'எக்ஸ்' தளம் இந்தியாவில் செயலிழப்பு..!! என்ன காரணம்?

Wed Aug 14 , 2024
As per DownDetector, a platform that monitors service outages, X (formerly Twitter) users from various regions filed reports, and the problems started around 1 pm

You May Like