fbpx

Alert…! காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

English Summary

Heavy rain is likely in 8 districts today, according to the Chennai Meteorological Department.

Vignesh

Next Post

BREAKING | விடிந்ததுமே பரபரப்பு..!! சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டர்..? 2 போலீசார் படுகாயம்..!!

Tue Aug 13 , 2024
Famous rowdy Rohit Rajan was shot dead by the police in Maduravayal, Chennai.

You May Like