fbpx

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து!. இதுவரை 6 பேர் பலி!. ஹட்சன் ஆற்றில் சடலங்கள் கண்டெடுப்பு!

Helicopter crash: அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். ஹட்சன் ஆற்றில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) சுற்றுலா ஹெலிகாப்டர் ஹட்சன் ஆற்றில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஹெலிகாப்டர் விமானியும் அவர்களுடன் இருந்ததாகவும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். விபத்துக்குப் பிறகு இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்களும் பின்னர் இறந்தனர் என்று செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.

நியூயார்க் போஸ்ட்-ன் படி, ஹெலிகாப்டரில் சீமென்ஸ் ஸ்பெயினின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. மேயர் எரிக் ஆடம்ஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது, ​​ஆற்றில் இருந்து மீட்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்” என்றார். இது மிகவும் சோகமான மற்றும் மனதை உடைக்கும் விபத்து என்றும் அவர் மேலும் கூறினார்.

Readmore: கூகுள் மேப்ஸ் ஏன் சாலை விபத்துகளை ஏற்படுத்துகிறது?. அதிர்ச்சி காரணத்தைக் கூறிய நிறுவனம்!. என்ன தெரியுமா?

English Summary

Helicopter crash in America! 6 dead so far! Bodies found in Hudson River!

Kokila

Next Post

வேலை இல்லாத நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை…! முழு விவரம்

Fri Apr 11 , 2025
Tamil Nadu government to provide Rs.1000 monthly allowance to unemployed people…! Full details

You May Like