fbpx

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் நிம்மதி..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என விளக்கம் அளித்துள்ளார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி, பழைய நிலையே நீடிக்கும். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து 8-வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதனால், நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Read More : பங்குச்சந்தை முதலீட்டில் ரூ.30 லட்சம் கோடியை இழக்க பிரதமர், அமித்ஷாவே காரணம்..!! குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி..!!

English Summary

RBI Governor Shaktikanta Das said that there is no change in the repo interest rate. Accordingly, he explained that the interest rate for short-term loans will continue at 6.5 percent.

Chella

Next Post

தினசரி சர்க்கரையை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்..? அளவுக்கு மீறினால் என்ன நடக்கும்..?

Fri Jun 7 , 2024
சர்க்கரை சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும் என்பது தொடங்கி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சர்க்கரை உண்மையில் மோசமாக சித்தரிக்கப்படுகிறதா? தினமும் நாம் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சர்க்கரைக்கு நேரடியாக கொழுப்புச் சேர்க்கைக்கு வழிவகுக்கும் குணம் இல்லை என்றாலும், அது மறைமுகமாக எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். சர்க்கரை நுகர்வு அதிகரிப்பு கலோரி உட்கொள்ளல் அதிகரிப்புடன் தொடர்புடையது என்பதை ஆய்வுகள் […]

You May Like